யாழ்.வல்வெட்டித்துறையில் தொடரும் கொரோனா அபாயம் – மேலும் 13 பேருக்கு தொற்றுதி

யாழ்.வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில்,

அப்பகுதியுடன் தொடர்பில் இருந்திருக்ககூடும் என்ற அடிப்படையில் பல பகுதிகளில் பீ.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை நடத்தப்படுகின்றது.

இதன்படி தீருவில் பகுதியிலும் சந்தேகத்தின் அடிப்படையில் 100 போிடம் எழுமாறாக நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 13 பேருக்கு

தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.