நான்காவது கொவிட் அலையை நெருங்கும் இலங்கை!

இலங்கை நான்காவது கொவிட் அலையின் ஆரம்பத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாக இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் தொற்றாளர்கள் கணிசமான அளவு இணங்காப்படுவதாக அச் சங்கத்தின் தலைவர், விஷேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயணக் கட்டுப்பாட்டில் உள்ள குறைபாடுகளே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை 4 ஆவது அலையை நெருங்கிக் கொண்டிருப்பதை இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் உணரக்கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.