சிறுமியின் அறையில் கண்டுபிடிக்கப்பட்ட 5000 ரூபா – வெளிவரும் பகீர் உண்மைகள்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய சிறுமி உயிரிழக்க காரணமான பௌத்தாலோக மாவத்தையில் உள்ள வீட்டில் 19 வயதான வேலைக்கார இளைஞன் குறித்த சிறுமியைத் தாக்கியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் அறையில் 5 ஆயிரம் ரூபா தாள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குவாதம் ஏற்பட்ட பின் இத்தாக்குதல் நடந்ததாகத் தெரிய வந்துள்ளது.

குறித்த வேலைக்காரனால் தாக்கப்பட்டதால் பயந்து சிறுமி தனது தாயாரை அழைத்து தான் துன்புறுத்தப்படுவதாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.