டயகம சிறுமி உயிரிழப்பு தொடர்பில் மேலும் இரு பெண்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது!

ரிஷாட் வீட்டில் கடமையாற்றிய 16 வயதுடைய சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீன் வீட்டில் கடமையாற்று மேலும் இருவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமியை சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கு முன்னர் சேவையில் இணைத்த 21 மற்றும் 32 வயதுடைய பெண்கள் இருவரிடமே இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

டயகம பகுதியில் வைத்து நேற்று புதன்கிழமை குறித்த சிறுமியின் தாய், சிறிய தந்தை, சகோதரன் மற்றும் சகோதரியிடம் 10 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.