தொடர்ந்து தீவிர அபாயத்தில் யாழ்ப்பாணம்!

யாழ்.மாவட்டத்தில் 22 பேர் உட்பட வடமாகாணத்தில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 501 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் 22 பேர்

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 05 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 04 பேர், (ஒருவர் பிறந்து 17 நாட்களேயான பெண் குழந்தை)பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் 02 பேர், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், நொதேர்ன் சென்றல் வைத்தியசாலையில் ஒருவர், வேலணை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்ப்பட்டுள்ளது.