மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகள் மீள ஆரம்பம்!

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துச் சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான பேருந்து, தொடருந்து சேவைகள் மீள ஆரம்பமாகவுள்ளன.