யாழ். அராலியில் வாள்வெட்டுக்குழுவினர் வீடு புகுந்து அட்டகாசம்!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வாள்வெட்டுக் குழுவொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவது,

நேற்று (22) இரவு 10.45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற்று இரும்புக் கம்பிகள் சகிதம் வந்த நால்வர், வீட்டு ஜன்னலின் கண்ணாடிகள் மற்றும் முச்சக்கரவண்டியின் கண்ணாடியினை உடைத்து முச்சக்கரவண்டிக்கு தீ மூட்டியுள்ளனர்.

இதனால் முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட விழித்துக் கொண்ட வீட்டுக்காரர்களும், அயல்வீட்டினரும் துரத்தியவேளை அவர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.