யாழில் ஆபத்தான ஒரு தொகை வெடிமருந்துகள் மீட்பு!

யாழ்ப்பாணம்- குருநகர் பகுதியில் ஒரு தொகுதி வெடி மருந்துக்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

குருநகர் பகுதியில் சட்டவிரோதமாக வெடிபொருட்கள் கையாளப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் திடீர் சுற்றிவளைப்பினை இராணுவத்தினர் மேற்கொண்டனர்.

இதன்போதே TNT வெடி மருந்து மற்றும் 4 டெ்டனேட்டர்கள் ஆகியவற்றினை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.