குழந்தைகளுக்கு கொரோனா தொற்றுதல் அதிகரிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 500 குழந்தைகள், கொழும்பிலுள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையில் இருந்து இதுவரை பதிவாகியுள்ளனர் என அந்த வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பத்து குழந்தைகள் குறித்த வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர்.

குழந்தைகளில் இதய நோய் அதிகரித்து வருவகின்றது.

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் தினமும் 5 முதல் 10 குழந்தைகள் வரை கொரோனா இருப்பது கண்டறியப்படுகிறது.

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 28 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், குழுவில் பல குழந்தைகள் கொரோனா வைரஸ் மற்றும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.