மட்டக்களப்பு நகர் பொது சந்தை தொகுதியில் உள்ள வர்த்தக நிலைய பகுதியில் இன்று திங்கட்கிழமை எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பொது சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதான் தலைமையில் பொது சுகாதார வைத்திய அலுவலக குழுவினரால் அண்டிஜன் பரிசோதனை 79 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதற்கமைய அதிக தோற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து இரு வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக பொது சுகாதார பரிசோதகரினால் மூடப்பட்டு முத்திரையிடப்பட்டன.
இந் நிலையில் தொடர்ந்து வர்த்தக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சுகாதார நடைமுறையை பேணி நடந்துகொள்ளுமாறு சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.