இந்தியாவில் 3 கோடியை கடந்தது தொற்றாளர் எண்ணிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 கோடியை கடந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 39 ஆயிரத்து 361 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி, இதுவரையில் இந்தியாவில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 14 இலட்சத்து 11 ஆயிரத்து 262 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், கடந்த 24 மணிநேரத்தில் தொற்றினால் இந்தியாவில் 416 பேர் உயிரிழந்தனர்.

இதற்கமைய, இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 20 ஆயிரத்து 967ஆக உயர்வடைந்துள்ளது.