வவுனியா நுழைவாயிலில் மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனையில் 22 பேருக்கு கொரோனா தொற்று!!

தென்பகுதியில் இருந்து வடக்கிற்குள் நுழைந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்பகுதியில் இரவு வேளைகளில் வடக்கிற்கு வருபர்களை வவுனியா ஏ9 வீதி நுழைவாயிலான மூன்றுமுறிப்பு பகுதியில் வழிமறித்த சுகாதாரப் பிரிவினர் கடந்த திங்கள் கிழமை நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 5.30 வரை 300 இற்கு மேற்பட்டவர்களிடம் பிசீஆர் பரிசோதனை முன்னெடுத்திருந்தனர்.

அதன் முடிவுகள் இன்று (30.07) வெளியாகிய நிலையில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி தேக்கவத்தைப் பகுதியில் ஒருவருக்கும், புளியங்குளம் பகுதியில் ஒருவருக்கும், கூமாங்குளம் பகுதியில் இருவருக்கும்,