இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 20,277 பேருக்கு கொரோனா!

இந்தியாவின் கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,277 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் கடந்த மாதத்தில் உச்சத்தை அடைந்த நிலையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது கோரொனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது.

எனினும் கேரளாவில் நாட்டின் தினசரி பாதிப்பில் 50% பதிவாகி இருப்பதால், அம்மாநிலத்தில் கொரோனா 3வது அலை தொடங்கி விட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.