இலங்கையின் கொவிட் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்து 500ஐ கடந்தது!

A man stands next to the body of his wife, who died due to breathing difficulties, inside an emergency ward of a government-run hospital, amidst the coronavirus disease (COVID-19) pandemic, in Bijnor, Uttar Pradesh, India, May 11, 2021. REUTERS/Danish Siddiqui

நாட்டில் மேலும் 67 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் (31) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,508 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் மேலும் 1,655 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 310,494 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.