பெற்றோருடன் கடலுக்கு சென்ற சிறுமி ஒருவர் மாயம்!

தங்கல்ல, கபுஹேன கடற்கரைக்கு தனது தாய் மற்றும் தந்தையுடன் சென்ற சிறுமி ஒருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த சிறுமியை காப்பற்ற முற்பட்ட போதிலும் சிறுமியின் சடலத்தையே மீட்க கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பானந்துறை, களுதேவல பகுதியை சேர்ந்த 7 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.