யாழ் வருகிறார் இராணுவத் தளபதி!

தேசிய கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா நாளை (07) யாழ்ப்பாணத்திற்கான திடீர் விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.

யாழ். வரும் இராணுவத் தளபதி, யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியத்தினை திறந்து வைக்கவுள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணம் தனியார் விடுதி ஒன்றில் முன்னாள் விடுதலைப்புலி போராளிகளுக்கு உதவித்திட்டம் வழங்கும் நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.