வவுனியாவில் தாயும் குழந்தையும் கொன்றவன் கூறிய அதிர்ச்சி அளிக்கும் வாக்குமூலம்!

வவுனியா, மருதன்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் தனது தாயையும் 6 மாத குழந்தையும் எரித்துக் கொன்ற நபரை ஆறு வருடங்களுக்குப் பிறகு வவுனியா பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞரிடம் முன்னெடுக்கப்பட விசாரணையில் அவர் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

குறித்த தாய் மற்றும் அவரது குழந்தையை தானே கொலை செய்து தீயிட்டு எரித்ததாகவும், அவர் பொலிசாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த வாக்கு மூலத்திற்கமைய முருகனூர் பகுதியில் உள்ள இளைஞரின் வீட்டிற்கு நேற்றையதினம் சென்ற பொலிசார் அங்கு பல்வேறு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்த பெண் யாழ், கோண்டாவில் பகுதியை சேர்ந்தவர் என்றும், குறித்த இளைஞர் அவரது காதலன் எனவும் பொலிசாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட இளைஞரை நீதிமன்றில் முற்படுத்தி மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்