இறந்த நடிகை மீண்டும் உயிரோடு வந்த அதிர்ச்சி!

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நாற்பது வருடங்களுக்கு முன்பு கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சாரதா. மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியின் அம்மாவாக இவர் நடித்திருந்தார்.

இவர் சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதும் பெற்றவர். இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக இவர் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவியது.

இதனை தொடர்ந்து பலரும் சாரதாவுக்கு போன் செய்து விசாரிக்க ஆரம்பித்தனர். இதைக்கேட்டு அவர் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, “நான் உயிருடன் நலமாக தான் இருக்கிறேன். எனக்கு எந்த நோய் நொடியும் இல்லை. அதனால் வதந்திகளை நம்ப வேண்டாம். ஒருத்தரை பற்றி வதந்தி பரப்ப வேண்டும் என்பதற்காக இதுபோன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளில் இறங்க கூடாது” என கூறி இருக்கிறார்.