நாடு முழுமையாக முடக்கப்படக் கூடும் : அவசர தீர்மானத்தில் அரசாங்கம்

தற்போதைய சூழ்நிலையில் பயணத்தடைக்கு அப்பாற்பட்ட தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாட்டில் பயணத்தடையை அமுல்படுத்துவதா அல்லது வேறு என்ன நடவடிக்கையை அமுல்செய்வது பற்றி இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் கோவிட் ஒழிப்பு பற்றிய கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, சுகாதார அமைச்சின் பிரதானிகள் சுகாதார அமைச்சர் உட்பட குழுவினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்றை நேற்று மாலை மேற்கொண்டிருந்தனர்.

அதன் தொடர்ச்சி இன்று காலை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீர்மானம் ஒன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.