யாழில் மேலும் இருவர் கொரோனாவுக்கு பலி!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுப்பிட்டியைச் சேர்ந்த (57 வயது) ஆண் ஒருவர் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

அதேபோன்று வல்வெட்டித்துறை சேர்ந்த (75 வயது) முதியவர் ஒருவரும் நேற்று உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 160ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.