தடுப்பூசி அட்டை கட்டாயம் ஆக்கப்படுகிறது, பயண கட்டுப்பாடு கடுமையாக்கப்படுகிறது!

நாட்டில் தற்போதுள்ள கொரோனா பரவல் அபாய நிலையினை கருத்திற்கொண்டு பயண கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக இராணுவ தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

அதன்படி, இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், அத்தியாவசிய தொழில்களில் ஈடுபடுவோருக்கு மாத்திரம் மாகாணங்களுக்கு இடையில்

பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் பொது இடங்களுக்கு வருகைத்தருபவர்கள் தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது அவசியமாகுமெனவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டார்.