கொரோனாவினால் உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்ற PHI மீது தாக்குதல்

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்ற சுகாதார பரிசோதகர் மீது இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

திக்வெல்ல, கோன்தெனிய பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு தாக்குதலை மேற்கொண்ட இருவரும் கைது செய்யப்பட்டு 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.