வாரத்தின் 7 நாளும் கொரோனா பரிசோதனை

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வாரத்தின் 7 நாட்களும் கொரோனா
பரிசோதனைகள் இடம்பெறும் என மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.
சுகந்தன் தெரிவித்துள்ளார்.

பொது மக்களிடம் இருந்து நேற்று சனிக்கிழமை கிடைப்பெற்ற முறையீடுகளை
அடுத்து அதனை நிர்வத்தி செய்யும் வகையில் வைத்தியசாலை நிர்வாகம்
உடனடியாகவே இந் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாகவும், வாரத்தின் 7
நாட்களும் காலை, மாலை நேரங்களில் பிரத்தியோகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
இடத்தில் அண்டிஜென் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகளை பொதுமக்கள் வழங்க முடியும் எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடியான சூழ் நிலையில் பொது மக்கள் வைத்தியசாலையின்
சேவைகள் தொடர்பில் அசௌகரியங்களை எதிர்கொண்டால் அதனை தனது நேரடி
கவனத்திற்கு கொண்டு வருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.