மீண்டும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்கு வருகிறது!

இலங்கையில் நாளை (16.08.21) முதல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படுவதாகவும், மறு அறிவித்தல் வரையில் இந்த தனிமைப்படுத்தல் ஊடரங்கு உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், ஊரடங்கு வேளைில் அத்தியாவசிய சேவைகளுக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.