வார இறுதி நாட்களில் முழு நேர ஊரடங்கு?

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் நாடு முழுவதிலும் வார இறுதி நாட்களில் (சனி,ஞாயிறு) முழுநேர தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல்படுத்த அரசாங்கம் ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதுகுறித்த பேச்சுவார்த்தையை அரசாங்கத் தரப்பு நடத்திவருவதாகவும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 04 மணிவரை நாடு முழுவதிலும் இரவுநேர தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாகின்றமை குறிப்பிடத்தக்கது.