மேலும் 167 கொரோனா மரணங்கள் பதிவு!

இலங்கையில் நேற்று ஒரே நாளில் (15.8.2021) மேலும் 167 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை மொத்தமாக 6,263 பேர் நாட்டில் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டில் நேற்று 15 ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளாகி 167 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 103 ஆண்களும் 64 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

30 வயதிற்கு கீழ் ஒரு ஆணும் 30 முதல் 59 வயதிற்கிடைப்பட்டோரில் 22 ஆண்களும் 14 பெண்களுமாக 36 பேரும், 60 வயதும் அதற்கு மேற்பட்டோரில் 80 ஆண்களும் 50 பெண்களுமாக 130 பேர் இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இன்றையதினம் 3,414 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.