கிரிபத்கொடையில் தீ விபத்து – 4 சிறுவர்கள் உட்பட 12 பேர் பாதுகாப்பாக மீட்பு

கிரிபத்கொடையில் 4 மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கட்டடத்திற்குள் இருந்த 4 சிறுவர்கள் உட்பட 12 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

தீப்பரவலுக்கான காரணம் குறித்து இதுவரையில் தகவல் வெளியிடப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்னர்.