கொழும்பின் புறநகர் பகுதியில் பாரிய தீ விபத்து – உயிருக்கு போராடும் 12 பேர்

கொழும்பின் புறநகர் பகுதியான கிரிபத்கொடை நகரிலுள்ள நான்கு மாடிக் கட்டடமொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த கட்டடத்தொகுதிக்குள் சிக்கியுள்ள சிறுவர்கள் உட்பட 12 பேரை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு படையனர் போராடி வருகின்றனர்.

தீ பற்றியமைக்கான உடனடி காரணங்கள் எவையும் வெளியாகவில்லை. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.