சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து கொரோனா நோயாளி தப்பியோட்டம்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.

இன்று (17) காலை அவர் தப்பியோடினார்.

கோப்பாய் பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவரே தப்பியோடினார்.

அவர் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.