யாழ் கரவெட்டியில் ஆசிரியை உட்பட 16 பேருக்கு கொவிட் தொற்று!

விக்னேஸ்வரா கல்லூரி ஆசிரியை உட்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கரவெட்டி மத்தி பகுதியைச் சேர்ந்த கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியைக்கும், அவரது கணவருக்கும், கரணவாய் கிழக்கு பகுதியில் 3 பேருக்கும், நெல்லியடி பகுதியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை ஆதிகோயிலடிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட 200 பேருக்கான அன்ரிஜன் பரிசோதனை நேற்று வல்வெட்டித்துறை ஆதிகோயிலடியில் மேற்கொள்ளப்பட்டது.

இதில் பருத்தித்துறை நகரசபை ஹாட்லிக் கல்லூரி விடுதி வீதியில் மூவருக்கும், கெருடாவில் தெற்கு பகுதியில் ஒருவருக்கும், அல்வாய் வட மேற்கு பகுதியில் இருவருக்கும், அல்வாய் மேற்கு பகுதியில் ஒருவருக்கும், புலோலி தென் மேற்கு பகுதியில் இருவருக்கும், அல்வாய் வடக்குப் பகுதியில் ஒருவருக்கும் என 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.