கிளிநொச்சியில் குளத்தில் மூழ்கி இறந்த இளைஞனின் சகோதரன் மீது பொலிசார் மூர்க்கத்தனமான தாக்குதல்!

குளத்தில் மூழ்கி உயிரிழந்த நபரின் சகோதரர் மீது கிளிநொச்சி பொலீசார் தாக்குதல்.
கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தில் மூழ்கி 22 வயதான இளைஞர் நேற்று முன் தினம் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சகோதரர் கிளிநொச்சி வைத்திய சாலையில் பொலிசாருக்கு தாக்கியதாகவும்.

அரச சொத்தை சேதமாக்கியதாக கூறியும் அவரை கைது செய்து இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலீசில் இருந்து விடுதலை ஆகி வந்த நபரின் முதுகில் இவ்வாறு காயங்கள் இருப்பது அவதானிக்கப்பட்டது.