குழந்தையை பிரசவித்த 33 வயது பெண் கொரோனாவுக்கு பலி!

குழந்தையை பிரசவித்த 33 வயது பெண் ஒருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

மகப்பேறுக்காக கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் குழந்தை பிரசவித்து 6 நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.

தெல்கொட பகுதியைச் சேர்ந்த இந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.