தப்பியோடிய கொரோனா தொற்றாளர் ஒருவர் வீதியில் சடலமாக மீட்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி, அதன் பின்னர் வீதியோரத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

காலி – பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நபரே இவ்வாறு நேற்று முன்தினம் மாலை தப்பியோடியுள்ளார்.

அதன் பின்னர் குறித்த நபரது சடலம் மாதம்பே பிரதேசத்திலுள்ள ரயில் கடவைக்கு அருகில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.