ஒட்சிசனுடன் இரண்டு கப்பல்கள் இலங்கைக்கு!

இலங்கையினால் இந்தியாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மருத்துவ ஒட்சிசன் தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வருவதற்காக கடந்த தினம் திருகோணமலை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ´சக்தி´ என்ற கப்பல் குறித்த ஒட்சிசன் தொகையை ஏற்றிக் கொண்டு இன்று (20) காலை சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கி புறப்பட்டுள்ளது.

அதேபோல், மேலும் ஒரு தொகை மருத்துவ ஒட்சிசனுடன் இந்திய கடற்படைக்கு சொந்தமான ´சக்தி´ என்ற கப்பல் ஒன்று இந்தியாவின் விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் இருந்து நேற்றிரவு (29) இலங்கை நோக்கி புறப்பட்டுள்ளது.

குறித்த கப்பல்கள் இரண்டும் ஆகஸ்ட் மாதம் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் இலங்கையை வந்தடையும் என இலங்கை கடற்படை குறிப்பிட்டுள்ளது.