கிராம சேவகர்கள் ஆறு பேருக்கு கொரோனா தோற்று உறுதி!

கிராம சேவகர்கள் ஆறு பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டம், நிட்டம்புவ பிரதேசத்தில் கிராம சேவகர்கள் 6 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அத்தனகல்ல பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

கரஸ்னாகல, ரத்பொகுனகம, கத்தொட்ட மற்றும் தீனா பமுனுவ கிழக்கு பகுதி ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் கிராம சேவகர்களுக்கே கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளானவர்களும் அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.