வடகிழக்கு மாகாணங்களின் ஆயர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேசிய சுவிஸ் தூதுவர்கள் குழு!

வடகிழக்கு ஆயர்களுடன் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிஸ் நாட்டின் துாதுவர் டொமினிக் பார்க்லர் சந்தித்து கலந்துரையாடல் நடாத்தியிருக்கின்றார்.

இன்று நண்பகல் உலங்கு வானுர்தி மூலம் யாழ்ப்பாணம் வந்தடைந்த சுவிஸ்லாந்து துதுவர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் வடக்கு கிழக்கு ஆயர்களை சந்தித்தார்.

இதன் போது சமகால நிலமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இந்த சந்திப்பில் யாழ் ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை, மன்னார் ஆயர் இம்மனுவேல் பெர்னாடோ,

திருகோணமலை ஆயர் நோயல் இம்மனுவேல் ஆண்டகை ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.