இரண்டு வருடங்களுக்கு விதிக்கப்பட்ட தடை! 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விபரம் இதோ!

அரச செலவீனங்களை குறைப்பற்காக புதிய அரச அலுவலங்கள் அமைப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் கீழ் 2ஆவது வரவு செலவுத்திட்டம், இன்று இலங்கையின் நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்த வரவுசெலவுத்திட்டத்தை சமா்ப்பித்து உரையாற்றியிருந்தார்.

இதன்போது அவரால் யோசனைகள் பல முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் அவர் முன்வைத்த யோசனைகள் இதோ,

1) அரச செலவீனங்களை குறைப்பற்காக புதிய அரச அலுவலங்கள் அமைப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு தடை

2) மின்சாரத் தேவையை சூாிய சக்தியை பெற்றுக்கொள்ளவும், அரச அலுவலங்களின் தொலைபேசி பாவைனையை 25 வீதம் குறைக்கவும் யோசனை

3) அனைத்து அரச பணியாளா்களின் ஓய்வூதிய முரண்பாடுகள் தீா்க்கப்பட்டு, புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

4) அரச சேவையின் பணியாளா்களது ஓய்வூதிய வயது 65 ஆக உயா்த்தப்படுகிறது.

5) அனைத்து பாடசாலைகளுக்கும் நவீன இணைய வசதிகள் செய்துக்கொடுக்கப்படும்.

6) முச்சக்கர வண்டிகளுக்கான அதிகாரசபை அமைக்கப்படவுள்ளது.

7) ஓய்வூதியம் பெறாத சிரேஸ்ட பிரஜைகளுக்கு ஓய்வூதிய திட்டம். இதற்கான 100 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுகிறது

8) புதிய வியாபாரங்களுக்கு 2022 இல் பதிவுக்கட்டணங்கள் அறவிடப்படாது

9) நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான ஓய்வூதியத் தகுதிக்காலம் 10 வருடங்களாக நீடிக்கப்பட்டுள்ளது.

10) சேதனப்பசைளையை ஊக்குவிக்க கிராமசேவகர் மட்டத்தில் திட்டம் முன்னெடுக்கப்படும்.

11) வெளிநாட்டு முதலீடுகளை அதிகாிக்க, நிபந்தனைகளை தளா்த்துவதற்கு திட்டங்கள் விரைந்து முன்னெடுக்கப்படும்.

12 ) வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு செல்வோருக்கான பயிற்சிகள் மேம்படுத்தப்படும்

13) அரச சேவையாளா்களுக்கான எாிபொருள் 5 லீற்றர்களால் குறைக்கப்படும். மாதாந்த தொலைபேசி கட்டணம் 25வீதத்தினால் குறைக்கப்படும்

14) கொவிட் காரணமாக வருமானத்தை இழந்த முச்சக்கர வண்டி உாிமையாளருக்கு நிவாரணம் வழங்க 700 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

15) தனியாா் பேரூந்து உாிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

16) கோவிட் முடக்க காலத்தில் வருமானத்தை இழந்த பாடசாலை வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணம் அளிக்க 400 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழிவு

17) வீதி அபிவிருத்திக்காக மேலதிகமாக 20,000 மில்லியன் ஒதுக்கீடு

18) அனைவருக்கும் குடிநீர் வசதி 24 மணி நேரமும் சுத்தமான குடிநீரை வழங்க 15,000 மில்லியன் ஒதுக்க நடவடிக்கை

19) திரவப்பால் உற்பத்தியை அதிகரிக்க தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக 1000 மில்லியன் ஒதுக்க எதிர்பார்ப்பு

20) புதிய தொழிநுட்பத்துடன் கூடிய பெருந்தோட்டங்களை உருவாக்கும் நோக்கம்

21) இலங்கையை முதன்மையான இரத்தினக்கற்கள் கொள்வனவு மையமாக மாற்றுவது எமது நோக்கம்

22) ஆடைக் கைத்தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்திய செய்ய நடவடிக்கை

23) மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மீதான சட்டத்தை அறிமுகப்படுத்த முன்மொழிவு

24) வீடு மற்றும் நகர அபிவிருத்திக்காக 2 ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு

25) மீன் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்கு மேலதிகமாக 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

26) சிறைக்கைதிகளின் நலன்களை மேம்படுத்த மேலதிகமாக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

27) கா்ப்பிணி தாய்மார்களுக்கு 24 மாதங்களுக்கான போசனை பொதிகளுக்காக மேலதிகமாக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

28) அரச சேவையாளா்களுக்கான உந்துருளிகள் வழங்கல்களுக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

29) ஆசிாியா்கள், அதிபா்களுக்கான வேதன முரண்பாட்டுக் கொடுப்பனவுகளை ஒரே தடவையில் வழங்குவதற்கு 30,000 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு

30) அரச சேவைகளில் பணியாற்றும் பட்டதாாிகளுக்கு 2022 முதல் நிரந்தர நியமனம் வழங்கப்படும். அவா்களுக்கான கொடுப்பனவுகளுக்காக 7600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

31) சிகரட்டின் விலை 5 ரூபாவால் அதிகாிக்கப்படுகிறது.

32) 2000 மில்லியன் ரூபாவை வருடாந்தம் வருமானமாக ஈட்டும் நிறுவனங்கள் ஒரு தடவையில் மாத்திரம் 25வீத வாியை செலுத்தவேண்டும்

33) வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் வாகன குத்தகை நிறுவனங்களின் பெறுமதிசோ் வாி 15வீதத்தில் இருந்து 18ஆக அதிகாிக்கப்படுகிறது.

34) வெவ்வேறு காரணங்களால் காணாமல் போனவா்களின் குடும்பங்களுக்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு