மின்தடை தொடர்பில் வுவுனியா மக்களுக்கு முக்கிய தகவல்!

வவுனியா மட்டும் சில பிரதேசங்களில் உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை புதன்கிழமை (15-12-2021) காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வவுனியா மாவட்டத்தில் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து வைரவ புளியங்குளம், ஆதி விநாயகர் கோவிலடி, குருக்களூர் மன்னார் வீதி, குருக்கள் புதுக்குளம், மணியர்குளம், முகத்தாங்குளம் முதலாவது பண்ணை ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடை செய்யப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.