லண்டனில் ஜில்லா பட பாணியில் சகோதரரின் கையை பிடித்த படி உயிரிழந்த நபர்!

பிரித்தானியாவில் நேற்றைய தினம் இரவு கத்தியால் குத்தப்பட்டு கடைசி நிமிடம் தன்னுடைய சகோதரரின் கையை பிடித்துபடி நபர் உயிரிழந்துள்ள சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘

இச்சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் (15-12-2021) பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் கிங்ஸ்டனில் உள்ள Surbiton சாலையில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் நபர் ஒருவர் கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

பின்னர் தகவலறித்து பொலிஸார் ஆம்புலன்ஸ் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதன் பின் பாதிக்கப்பட்ட நபரை மருத்துவர்கள் உதவியுடன் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து, Surbiton சாலை நேற்றிரவு (15.12.2021) முதல் இன்று காலை (16.12.2021) வரை மூடப்பட்டு, பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

கத்தி குத்து சம்பவத்தில் உயிரிழந்த நபர் குறித்து பொலிஸார் நடத்திய விசாரணையில் அவரின் பெயர் Farhad Joseph Khalili (32) என்பதும், கிங்ஸ்டனில் இவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து மேலும் சில தகவல்களை பிரபல உள்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், சம்பவம் நடந்த அன்றைய தினம், Farhad Joseph Khalili-ன் சகோதரர் அங்கே இருந்துள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் குடும்ப உறுப்பினர் Emily Smith என்ற பெண் தெரிவிக்கையில், நான் அழுத படி சம்பவ இடத்திற்கு வந்தேன். இப்போது வரை எனக்கு இது அதிர்ச்சியாகவே உள்ளது. என்னால் இதை நம்பவே முடியவில்லை. அவர் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது, Farhad Joseph Khalili தன்னுடைய சகோதரரின் கையை பிடித்தபடி கடைசி மூச்சை விட்டு உயிரிழந்தார் என்று வேதனையுடன் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் 27 வயது மதிக்கத்தக்க நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கொலை நடந்த இடத்தில் தடவியல் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

இக்கொலை சம்பவத்தில் இன்னும் என்ன நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை, ஆரம்ப கட்ட விசாரணையாக ஒருவரை கைது செய்துள்ளோம். இதனால், இங்கு என்ன நடந்தது என்பதை யாரேனும் பார்த்திருந்தால், அதை பொலிஸாருக்கு தெரிவித்தால் குற்றவாளிகளை பிடிக்க மிகவும் உதவியாக இருக்குமென பொலிஸார் கோரியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள், உடனடியாக 101-ஐ அழைக்கவும் அல்லது @MetCC என டுவிட் செய்து, 6557/15DEC என்ற குறிப்பைக் கொடுக்கவும். இதேவேளை, 0800 555 111 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று பொலிஸார் உயர் அதிகாரியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த ஆண்டு (2021) லண்டனில் தொடர்ந்து கத்து குத்து சம்பவங்களால் உயிரிழப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.