தோழியை மிரட்டுவதட்காக கழுத்தில் போடப்பட்ட கயிறு நெரிக்கப்பட்டு இளைஞர் பலி….!

யாழில் பெண் தோழியை மிரட்டி கழுத்தில் கயிற்றை போட்டு தவறான முடிவை எடுத்த இளைஞன் கழுத்தில் நெரிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நேரலை காணொளி. யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் நேற்று இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 31 வயதுடைய வீரசிங்கம் ஸ்ரான்லின் ஜெயசிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் தெரியவருவதாவது, இளைஞன் யாழ்ப்பாணத்தில் தங்கி அச்சகம் ஒன்றில் வேலை செய்கிறான். இந்நிலையில், தான் தங்கியிருந்த அறையின் மேற்கூரையில் கயிற்றை கட்டி கழுத்தில் கட்டி, காதலிக்கு வீடியோ கால் செய்து மிரட்டியுள்ளார்.

ஆனால், அந்த வாலிபர் கற்றை கீழே விழுந்ததில் நிலை தடுமாறி கழுத்தில் கயிறு அறுந்து இறந்து கிடந்தது விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

சடலம் ஏற்கனவே பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.