சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென உள்வாங்கிய கடல்….!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் திடீரென கடல் உள்வாங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளதாக தமிழக் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் நேற்று நள்ளிரவில் மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென 10-15 மீட்டருக்கு கடல் உள்வாங்கியது.

சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக கடல் உள்வாங்கியதனால் மணற்பரப்பு அதிகளவில் தென்பட்டதாக கூறப்படுகின்றது. நள்ளிரவில் கடற்கரைக்கு வந்திருந்த மக்கள் கடல் உள்வாங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதற்கு பின்னர் சுமார் அரை மணிநேரத்திற்கு பின்னரே கடல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.

இதேவேளை கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவானதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதன் பாதிப்பு இந்தியாவில் ஏற்பட்டுமோ என்ற ஐயம் ஏற்பட்ட நிலையில், எந்த ஒரு பாதிப்பும் இல்லை என இந்திய சுனாமி மையம் தகவல் தெரிவித்திருந்தது.

இவ்வாறான நிலையில், கடல் திடீரென உள்வாங்கிய சம்பவம் சென்னை மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது.