மாங்குளத்தில் கணவனை கொடூரமாக கொன்ற பெண் – பகீர் வாக்குமூலம்…!

முல்லைத்தீவில் கணவனை கள்ளக்காதலனுடன் இணைந்து அடித்து கொன்றதாக மனைவி வாக்குமூலம் வழங்கியுள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் கடந்த 09 ஆம் திகதி மாங்குளம் செல்வபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

அவர் உயிரிழந்தமை தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மனைவியை கைது செய்துள்ளனர்.

மேலும் கைதான மனைவி விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.