முருத்தெட்டுவே தேரருக்கு ஏற்பட்ட அவமானம்! – மாணவர்களுக்கு பாராட்டு….!

கொழும்பு பல்கலைக்கழகத்தில் 2019ம் ஆண்டுக்கான சம்பிரதாயப்பூர்வ பட்டமளிப்பு விழாவின்போது பல்கலைக்கழகத்தின் வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்த பட்டத்தாரிகள் சிலர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வேந்தாரக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கைகளில் கறுப்பு பட்டியணிந்து வந்திருந்தனர்.

அத்துடன், அவரிடம் இருந்து பட்டப்பத்திரங்களை பெறுவதற்கும் மறுத்திருந்தனர். பட்டதாரிகளின் இந்த செயற்பாடுகள் சமூகவலைதளங்களில் வெகுவாகப் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

இது குறித்த விரிவான தகவல்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்.