நாட்டில் தற்போது மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது….!

நாட்டில் தற்போது மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் 177 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதன் விலை 157 ரூபாயில் இருந்து 20 ரூபாவாக அதிகரித்தது. அதேபோன்று 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றுக்கு 23 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இதன் புதிய விலை 184 ரூபாவில் இருந்து 207 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு லிட்டர் கார் டீசல் 111 ரூபாயில் இருந்து 121 ரூபாயாக அதிகரித்துள்ளது. 10 ரூபாவினால் விலை அதிகரித்துள்ளது.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 159 ரூபாவாகும். 144 ரூபாயிலிருந்து 15 ரூபாவாக விலை அதிகரிக்கப்பட்டது. இதேவேளை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 77 ரூபாவாக இருந்து 77 ரூபாவாகும்.