காதலன் இறந்த துக்கத்தில் ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவி தற்கொலை……!

வடபுதுப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரமணா என்பவரும், அதே பகுதியை சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவி-யும், கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், காதல் விவகாரத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனால் மனமுடைந்த ரமணா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

காதலன் இறந்ததையடுத்து, ரயில் முன் மாணவி பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.