வவுனியாவில் மின்சாரக் கம்பத்துடன் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளானது….!

வவுனியாவில் மின்சாரக் கம்பத்துடன் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று (26-12-2021) பிற்பகல் வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, அனுராதபுரம் பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற கார் ஒன்று வவுனியா, மூன்று முறிப்பு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டையிழந்து வீதி ஓரத்தில் காணப்பட்ட மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து சம்பவத்தில் காரில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். இவ் விபத்தினால் மின்சாரக் கம்பம் சேதமடைந்து விழுந்துள்ளதுடன், அப் பகுதியில் மின்சாரத் தடையும் ஏற்பட்டது.

உடைந்து விழுந்த மின்சார கம்பத்தை சீர் செய்து மக்களுக்கு மின்சார்ம வழங்கும் நடவடிக்கையை மின்சார சபையினர் முன்னெடுத்துள்ளனர். விபத்து குறித்த வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.