யாழில் கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு…..!

யாழ்ப்பாணம் – இளவாலை சந்தியில் உள்ள காணிக் கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளரின் கொல்வின் (வயது- 32) என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் சிலருடன் இணைந்து விருந்தில் கலந்து கொண்டிருந்த குறித்த இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது கொலையா, தற்கொலையா என்ற சந்தேகத்தில் இளவாலைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.