இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார்! தமிழர் பகுதியில் திகைக்க வைத்த இளைஞர்…!

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார் என தெரிவித்து வவுனியாவில் தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த சம்பவம் பலை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த நபர் இன்று (29) வவுனியா நகர மணிக்கோபுர சந்தியில் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

இதன்போது, அவர் இலங்கை தேசியக் கொடியை ஏந்தியிருந்தார். அதோடு , ‘இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். இதை ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா?, எங்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றுமா? இதற்கு மக்கள் நாம் ஒன்றுபடுவோம் ‘ என எழுதப்பட்ட சுலோக அட்டையையும் ஏந்தியிருந்தார்.

குறித்த தனிநபரின் கவனயீர்ப்பு போராட்டத்தால் மணிக்கூட்டு கோபுர சந்தியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பொலிஸார் அறிவுறுத்தியதையடுத்து, பழைய பேருந்து நிலையம் முன்பாக சென்று சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து அவர் சென்றதாக கூறப்படுகின்றது.