நாட்டில் மேலும் 1178 பேருக்கு தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 1,178 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த முதலாம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பிந்திக்கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின் அடிப்படையில் குறித்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த காலத்தில் பதிவான கொவிட் நோயார் எண்ணிக்கையே இவ்வாறு அறிக்கையிடப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.