மஹிந்தவின் ராஜினாமா குறித்து ஆனந்த தேரர் வெளியிட்ட கருத்து…!


மஹிந்த ராஜபக்ஷ (Mahina Rajapaksa) பிரதமர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் (Muruthuttuwe ananda thero) தெரிவித்துள்ளார்.

இன்று (29-12-2021) நாரஹேன்பிட்டி அபயராமயவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்

மேலும் ஆனந்த தேரர் தெரிவித்தது,

இலங்கையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு (Gotabaya Rajapaksa) சரியான தொலைநோக்குப் பார்வை இருந்தாலும் அவரைச் சுற்றியுள்ள சிலர் அதற்கு இடையூறாக செயற்படுகின்றனர்.

“பிரதமர் மஹிந்த சென்றால் எங்களிடம் தெரிவிப்பார். மஹிந்த ராஜபக்ஷவை விரட்டுவதற்கான சதியா என எங்களுக்குத் தெரியாது. தற்போது நாட்டில் பிரச்சினைகள் உள்ளன. ஜனாதிபதியை சுற்றி இருப்பவர்களால் நாட்டை கொண்டு செல்ல முடியாது.டொலரின் பின்னால் சகோதரர்கள் ஒன்றாக செல்ல வேண்டாம்.., இருப்பவர்களை மாற்றினால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பலாம். நடக்கப்போவதை தடுப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ சென்றால் சரிவராது. மஹிந்த ராஜபக்ஷ இதில் இருக்க வேண்டும். முடிவெடுத்திருந்தால் உடனே அதனை கைவிடவும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்